ஞானம் பெற்றவர்கள் என்ன செய்தார்கள் ?

 

படம்

                                         ஒரு சமயம் நானும் என் நண்பரும் சுடுகாட்டு வழியாக ( பகலில்தான் ) தமிழின் அருமை மற்றும் தவம் பற்றியும் மிக புத்திசாலிகள் மாதிரி பேசிகொண்டு போய்கொண்டு இருந்தபோது , எங்கள் பின்னாடியே வந்து கொண்டு இருந்த யாரோ ஒருவர் – சில அடிகள் முன்னேறி தம்பிகளா அதனால்தான் ’தமிழுக்கு இருவர் தவத்திர்க்கு ஒருவர்’ என்று சொல்லி விட்டு போனார் .யார் சொன்னது என்பதை கூட இருவரும் ஆராயவில்லை ஆனால் ஒருவர் இருவர் என்ற அந்த ‘ரைமிங் ‘மனசுக்குள் வெகு நாளாக ஏதோ பண்ணிகொண்டே இருந்தது .தவம் செய்ய போன பின்னர்தான் இதன் அர்த்தம் உணர்விலிருந்து அறிவுக்குள் பயனித்தது .

 

                          படம்                                  எவ்வளவுதான் தமிழில் பாண்டித்தியம் பெற்று இருந்தாலும் அதை மற்றொருவருடன் பகிர்ந்துகொள்ளும்போது அது இன்னும் சிறப்பாக தெரிவதோடு பேசும் மொழி பிரம்மத்தின் வெளிப்பாடு என்ற அர்த்தம் முழுமையடைகிறது .எனவே தமிழை பேசும்போது , விவாதிக்கும்போது , ஏதோ ஒரு படைப்பாக வெளிபடும்போது சொன்னவர்க்கே அது ஒரு தெளிவை தருகிறது .எனவே தமிழ் இறைவனோடாவது அல்லது இறைவனை பற்றியாவது பேசவேண்டும் என்ற கட்டாயத்திர்க்கு உரியது .

படம்

               ஆனால் தவம் தன்னை, தன் உயிரின் மேல் கவனிப்பை செலுத்தி அதன் மூலம் பிரம்மத்தை உணர்வது .இதர்க்கு பல மார்க்கம் இருந்தாலும் .தவம் – அறிவு – ஞானம் அதை அடைவது தனியே அவரவர் ,அவர்களுக்குள்ளே முயற்சிக்க வேண்டும் . இதையே எத்தனை பெரிய ஞானிகளோடும் அறிவாளிகளொடும் கைகோர்து கொண்டு சுத்தினாலும் வாய்க்காது என்பதை அந்த வார்த்தை உணர்த்தியது .

படம்

                           சரி ஞானம் என்பது அடைந்தவர்கள் இது தான் ஞானம் என்பதை எப்படி உணர்ந்தார்கள் .அப்போதெல்லாம் தவம் செய்கிறேன் என்ற பெயரில் ஒரு வெறித்தனதில் , யார் மீதோ கோபித்துக்கொண்டு யார் சொன்னதையோ கேட்டுக்கொண்டு உலகத்தை வெறுத்தது போல தன்னை காட்டிக்கொண்டு காட்டுக்குள் போய் திரும்பி வரும்போது பித்தம் தலைக்கேற பிணாத்தியவர்களும் உண்டு .அவர்கள் மாதிரி சரியான வழிகாட்டால் மற்றும் குரு இல்லாததால் அவர்கள் எழுதிவைத்ததை அல்லது சொல்லி வைத்ததை கேட்டுத்தான் தவம் பண்ணிணால் குடும்பத்தை விட்டு காட்டுக்குள் ஓடிவிடுவார்கள் என்று நம்பி கெட்டோம் பல காலம் .இப்போது டாக்டர்கள் ”ப்ரஸ்கிரிப்சனில் – மெடிடேசன்” பண்ணுங்கள் என்று எழுதி தரும் நிலை வந்து விட்டது .இப்போது பித்தம் தலைக்கு ஏறியதால் அதை இறக்க மெடிடேசன் பண்ணபோகிறோம் நாம் .

 படம்                           சரி இந்த கேள்விக்கு வருவோமே – இது தான் ஞானம் என்பதை எப்படி உணர்ந்தார்கள் ? ஒருவன் ஞானம் அடையப் பெற்றிருப்பதற்கு இரண்டு அறிகுறிகள் இருக்கின்றன.  முதலாவதாக எக்காரணத்தை  முன்னிட்டும் அவன் துன்பம் அடைவதில்லை . அவன் பெற்ற ஞானத்தால் உலகத்தையே புதிய நோக்கில் பார்க்கத் தூண்டும். அவருக்குள் புத்துணர்ச்சி பெருகும். அவன் புதுப்பிறவி எடுத்து புதிய மனிதனாக உலவுவார்கள். ஞானக்கண் மனிதனை உள்முகமாகப் பார்க்கத் தூண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. எல்லா உயிர்கள் மீது அன்பு கருணையும் ஏற்படும்.மற்றொன்று எல்லையில்லா சுத்தவெளியே இறை .அதனை உணரவே மற்ற வழிபாடுகள் அனைத்தும் என்பதை அறிவின் துணையோடு உணர்கிறான் .

படம்

                   சரி ஞானம் உணரப்பட்டு விட்டது .இனி அதன் பயனை எல்லோரும் நேரடியாக அனுபவிக்க வேண்டும் என சொன்னவர்கள் குறைவுதான்.அதர்க்கு பதிலாக இந்த உயிர் ,உடல் கொடுத்த பூமிக்கு எதாவது செய்ய நினைத்து மருத்துவம் , சோதிடம் , சுவடிகள் , என பல கலைகள் மேல் கவனம் செலுத்தினார்கள் .அதன் விளைவை பல தரப்பில் நாம் அனுபவித்து வருகிறோம் நிறைய இழந்துவிட்டோம் என்பது வேறு விசயம் .வேறு சிலர் அன்றைய மன்னர்கள் மாறினால் மனிதர்கள் வறுமை, பிணி ,பாதுகாப்பான வாழ்வு மலரும் என்பதர்க்காக அவர்களை நாடி சென்று போதித்தார்கள் .அவர்களே ஞானிகள் என்பவர்களும் ,சித்தர்கள் என்பருமாக நாம் பிரித்துக்கோண்டோம் .பிரம்மத்தின் சூத்திரத்தை உணர உணர உயிர்களின் படைப்பு , ஜட பொருள்களின் இயக்கம் , விண் ஞானம் கடந்த மெய் விளக்கம் பூமியில் அவர்கள் மூலம் வளர்ந்தது…எனவே ஞானத்தின் கடமை அதை செயலுக்கு கொண்டுவருவதும் தன்னை போல மற்ற உயிகளின்மேல் அன்பு செலுத்தி தன்னால் இயன்றதை செய்வதுமே ஞானத்தின் மேன்மை .

Tagged with: ,
Posted in ஆன்மீகம்

ஞான மலர்கள்.

           படம்       கடவுளின் தூதர்களாக ஞானிகளை மதிக்கிறோம் .ஞானிகள் பிறக்கிறார்களா அல்லது தனக்குள் தன்னை தேடி உருவாக்கி கொள்கிறார்களா என்பது தீராத கேள்விதான் .அதைவிடவும் பெரிய கேள்வி ஞானிகள் என்பவர்கள் யார் என்பதே ! அப்படிப்பட்ட தேடல் எனக்குள் மொட்டாக இருக்கும்போதே இரண்டு ஞானிகளை  தரிசித்து விட்டேன் .

                      படம்

   முதலாமவர் காஞ்சி பெரியவர் .அவருக்கு கனகாபிஷேகம் பண்ணிய சமயம் என நினைக்கிறேன் .காலை சுமார் பத்து மணி அளவில் இந்த இடத்திர்க்கு அழைத்துவருவார்கள் என்று சங்கர மடத்தின் உள்பகுதியில் ஒரு சிறு மேடையை காட்டினார்கள் .காத்து இருந்தோம் .சுமார் 10:10 ஏறக்குறைய தூக்கிகொண்டு வந்தார்கள் .மிக பெரிய லென்ஸ் கண்ணாடி அணிவித்து இருந்தார்கள் .எல்லோரும் அனுமதிக்க படவில்லை .சின்னவர் (அப்போது ) ஜெயந்திரர் மடத்தில் இருந்தார் .ஆனால் பார்க்க முடியவில்லை.எல்லோரும் இவரை ஞானிகள் என்கிறார்களே என்னவென்று உற்றுப்பார்த்துவிட்டு வந்தேன் .

                  படம்

       அதே காஞ்சி மடத்தின் சார்பில் ஜயேந்திரர் அவர்களால் துவங்கப்பட்ட இரு அமைப்பில் (ஜன் கல்யாண் மற்றூம் ஜன் மோச்சா என நினைக்கிறேன் ) தந்தையின் நண்பர் இருந்தார் .அவரிடம் நான் வேலை பார்த்துகொண்டு இருந்தமையால் அவர்  சார்பில் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்து இருந்த வாரியார் சுவாமிகளுக்கு மாலை அணிவித்து கால் தொட்டு வணங்கும் வாய்ப்பை பெற்றேன்.ஒரு கனிந்த பழத்தை தொட்டது போல இருந்தது அவர் பாதங்கள்.

 படம்

                        பிறகு சில வருடங்கள் கடந்த பிறகு வயதுக்குரிய ஒரு புரியாத தன்மையில் 19 வயதில் சின்மயானந்தர் கருத்துக்களின் ஈர்ப்பால் அந்த மடத்தோடு தொடர்புகொண்டு மடத்தில் சேர அனுமதி கோரினேன் .ஒரு வாய்பு தந்தார்கள் .அப்போதும் திண்டுக்கல் நாகா தியேட்டர் பின்புறம் உள்ள ஒருவர் வீட்டுக்கு வந்த மடத்தின் சீடரால் நேர்முகம் காண சென்றபோது .அவர் ஏன் இங்கு வர ஆசைப்பட்டீர்கள் என்பது போன்ற பல கேள்விகள் கேட்டார் .விடைபெறும் முன் நான் அவரிடம் ஞானிக்குரிய தகுதி எது என்றேன் .இந்த வீட்டுக்குள் நான் வரும்போது என் பாதங்களை கழுவி , மலர்கள் தூவினார்களே அதை ஏற்றுகொண்டது போல அவர்கள் என்னை கல்லால் அடித்தாலும் ஒரே பக்குவ நிலையில் நான் ஏற்றுகொள்ள வேண்டும் இதுவே ஞானத்தின் முதல் படி என அன்பாக பதில் அளித்தார் .இந்த(   மடத்தில் சேரபோவது பற்றி ) விசயத்தை , வேறு ஆன்ம தொடர்புள்ள ஒருவரிடம் சொன்னபோது என்னை  போகவேண்டாம் அதர்க்கு பதிலாக பல தொண்டு வாய்ப்புகள் இருக்கிறது என்று என்னை தடுத்துவிட்டார் .அப்போது திண்டுக்கல் மனவளக்கலை மன்றத்தில் அருள்நிதி  பயிற்சிகூட முடிக்கவில்லை .ஆனால் தடுத்தவர்  திண்டுக்கல் மனவளகலை மன்றத்தின்( அன்றைய ) அருள்நிதி தாமோதரன் அவர்கள்.இன்று அதன் மூத்த பேராசிரியர் ( Sr.Prof.M.K.Dhamodharan -SELECTION OF MASTERS AND TRAINING WING OF THE WORLD COMMUNITY SERVICE CENTRE  ) பிறகு

                    படம்

  எதர்க்காக காலம் காத்து இருந்ததோ அது நடக்க ஆரம்பித்தது .நண்பர் ஒருவருக்கு உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் திண்டுக்கல் (இயற்கை) சூழல் விட்டு கடல் சார்ந்த நகரம் ஏதோ ஒரு  நகரம் போக சொல்ல ,அவருக்காக அவர் வீட்டில் கேட்டுகொண்டதால் புதுவை (உள்ளே நுழைந்தால் இந்திராகாந்தி அம்மையார் சிலைக்கு வலதுபுறம் ) குண்டு சாலையில் குடியேறினோம் .ஏற்கனவே பாலகுமாரன் படிப்பதில் ஒரு வெறித்தனம் இருந்தது எனக்கு .பாலாவின் எழுத்தெல்லாம் எனக்காக மட்டுமே எழுதியதாக ஒரு பிரம்மை .அவர்  சொன்னதெல்லம் அந்த வயதுக்கு அப்படியே  பின்பற்றினேன் .அதில் ஒன்று திருவண்ணாமலை விசிறி சாமியார் என்ற யோகி ராம் சுரத் குமார் தரிசனம்.புதுவையிலிருந்து திருவண்ணாமலை அருகாமை என்பதால் போனோம் .அப்போது அவருக்கு மடம் கட்டபடவில்லை .ஒரு வீட்டில் இப்பொது மடம் கட்டியிருக்கும் பகுதியில் இருந்தார் .எனது பிறந்த நாளை வைத்து கொண்டு ஆசீர்வாதம் பெற நண்பர் சொன்ன யோசனைப்படி போனோம் .மதியம் 3 மணி இருக்கும் .உள்ளே பஜன் நடப்பதால் அனுமதி மறுக்கப்பட்டது .உடன் வந்த நண்பர் எனக்கு பிறந்த நாள் என்றதும் அனுமதித்தார்கள் .பஜனில் யாரோ பார்த்த முகம் மாதிரி இருந்தார் .யாராக இருக்கவேண்டும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போதே பஜன் முடிந்து அழைக்கப்பட்டோம். கொண்டு சென்ற பழங்களை முன்வைத்தேன் .உட்கார்ந்த நிலையிலிருந்தவரிடம் பாதங்களை பணிந்தேன் .”ராம் ராம் ராம்”என்று சொல்லிக்கொண்டே முதுகை தட்டி  ஆசீவதித்தார்.அவரின் அந்த கண்கள் எனது உள்ளே தீட்சன்யமாக எதையோ தேடுவது போல உணர்ந்தேன் .

                          வெளியே வந்த பிறகு ஞாபகம் வந்தது நான் உள்ளே பார்த்த ( பார்த்த முகம் மாதிரி) அவர் பத்திரிக்கையாளரும் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நண்பருமான திரு .மணியன் அவர்கள் .

சரி இவர்களை பார்த்துவிட்டொமே இனி நாமும் ஆன்மீக தேடலை தொடங்கி சில மைல் தூரம் போவேன் .பிறகு வாழ்கையின் ஏதொ ஒரு விசயத்துடன் கலந்து நின்று விடும் .பிறகு ஒஷோ ஒரு நாள் தியானம் அதில் உள்ள அத்தனை விசயமும் வேகமும் பிடித்து போக அதுவும் சில நாள் .ஆனால் ஆறாத ரணம் போல வெகு தூரத்தில் மனம் தேடிகொண்டே இருந்தது .அதையும் இது அல்ல அது என தவ்வி இடம் பெயர ..புத்தகங்களுடன் என்னை சமாதானப்படுத்திக்கொண்டு பழக தொடங்கினேன் .அதுதான் முடியாதே !

படம்

                    மீண்டும் மனவளகலை 10 வருடங்கள் தொடர்பு விட்டு போய் விட்டது.இதர்க்கு இடையில் அருள்நிதி சான்றிதல்காணோம் .எப்படியோ கிடைத்தவுடன் ,மீண்டும் ஒருமுறை முயர்சிப்போம் என திருப்பூர் சாமுண்டிபுரம் மன்றம் போனேன் .கேட்க சங்கடம் .இருந்தாலும் உடற்பயிற்சி மட்டும் சேர்ந்து கொள்ள அனுமதியும் அதர்க்கு கட்டணம் கேட்டேன்.அங்கு பொறுப்பி இருந்தவர் உள்ளே வகுப்பு நடக்கிறது கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லி காத்து இருக்க சொல்ல ,வகுப்பு முடிந்து வெளிவே வந்த ஆசிரியர் பஸ் ஸ்டாண்ட் அழைத்து செல்ல ஆள் இல்லை .நான் போகிறேன் என்றதும் ,மீண்டும் அங்கிருந்த பொறுப்பாசிரியர் மாலை பார்க்கலாம் என்றார் .அந்த ஆசிரியரை விட்டு விட்டு நூலகம் போய் விட்டு திரும்பி வீட்டுக்குள் போக வண்டியின் பக்கவாட்டில் மாட்டி இருந்த நூலக புத்தகம் ,அருள்நிதி அசல் சான்றிதல் பையை காணோம் .

படம்

மீண்டும் சில மாதங்கள் நாமே அருள்நிதி எப்படி சொல்வது ? தயக்கத்துடன் ஒருநாள் மன்றம் போனேன் .அதே பொறுப்பாளர் .நீங்கள் இத்தனை வருடம் தாமதித்து வருவதால் ஏன் புதிய உறுப்பினர் போல ஆரம்பத்திலிருந்து தொடங்க கூடாது என கேட்டார் .ஏதோ ஒன்று எனக்குள் தடுத்தது .வீட்டுக்கு வந்து யோசித்தேன் .ஓ ! இத்தனை காலம் நான் அருள்நிதி என வெறும் பேப்பரை ( சான்றிதல் ) வைத்துக்கொண்டு அலைந்ததே எனது ஆன்ம ஞான தேடுதலின் தடை .தூக்கி எறிந்தேன் .

படம்

                      மீண்டும் இப்போது ஒவ்வொரு அகத்தாய்வாக மூன்றாம் நிலை வந்து விட்டேன் .இப்படி என்னை என் மன் கனத்தை இறக்கி வைக்க உதவிய ஞானி வேதாத்ரி மகரிஷியின் நினைவு தினம் .மேற்கண்ட இடத்தில்தான் அவர் கல்லறை இல்லை என் ஞான தேடலின் கருவறை.

Tagged with:
Posted in ஆன்மீகம்