ஆன்ம சாந்தி தவம்.

bird_escaping_from_cage

என் அம்மா இறந்த பிறகு திருப்பூர் ஒன்பதாவது நாள் நான் திரும்பியவுடன் திண்டுக்கல்லில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாத பலரும் வீட்டுக்குத் துக்கம் விசாரிக்க வந்தனர் .அப்படி வந்தவர்களில் நான் இணைந்து இருக்கும் மன வளக்கலை அமைப்பிலிருந்து பலர் வந்தனர் எல்லோரும் எங்கள் வீட்டுக்குத் திட்டமிட்டு அங்கிருந்துக் கிளம்புபோது எதேச்சையாக அங்கு வந்தவரில் நானும் வருகிறேன் என்று ஒருவர் அவர்களுடன் வந்தார்,அவர் பெயர்த் திரு.சந்திரகுமார் .சில வருடமாகத் திறப்புவிழாவுக்காகக் காத்து இருக்கும் அறிவுத்திருகோவிலின் அறங்காவளர்களில் ஒருவர் அவர்.வந்தவர்கள் எல்லோரும் விசாரித்து விட்டு விடைபெறும் போது அவர் மட்டும் பேசினார், நீங்கள் வருத்தப்படாதீர்கள் தம்பி, உங்கள் தாய் இறையருளுடன் சாந்தி அடைவார்.எனக்கு உங்களை அறிமுகமில்லை இருந்தாலும் இங்குவரத்தூண்டியது அந்த இறையருள் சித்தம் .நம்மையெல்லாம் ஒன்று சேர்த்த மஹரிசி சித்தம் என்றார் . எனக்கு அது ஆறுதலாக இருந்தது.

நேற்று இரவு அவர் மிகவும் உடல் நலம் குன்றி இருப்பதாகக் குறுஞ்செய்தி வந்தது.காலையில் ஐந்து மணிக்கு மன்றத்திற்குள் நுழைந்தவுடன் இன்று திரு.சந்திரகுமார் அவர்கள் இறைவனடிச் சேர்ந்து விட்டார் எனும் துயரமான செய்தியைச் சொன்னார்கள்

img_54417427dc5b5

எல்லோரும் சுமார் 8 மணிக்கு அவர் இல்லம் போனோம்.காலை 8.30 க்கெல்லாம் மின் மயானம் கொண்டு செல்ல இருப்பதாகக் கேள்விப்பட்டோம் .நாங்கள் அவர்கள் வீடு நெருங்கும் போதுதான் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எல்லோரும் வரத் தொடங்கியிருந்தனர் .வண்டியில் வருபவர்கள் உட்கார தேவையான இருக்கைகள் போடப்பட்டுக்கொண்டு இருந்தது .மிக அழுத்தமான சூழல் அங்கு நிலவிக்கொண்டு இருந்தது.வீட்டுக்குள் நுழைய, நுழையப் பெண்களின் அழுகைச் சத்தம் கதறலாய் வெளிப்பட்டு அந்த இல்லத்தைச்சுற்றி மிகப்பெரிய துக்க அலையின் அதிர்வை ஏற்படுத்திக்கொண்டு இருந்தது .வீட்டின் முன்னறையில் திரு .சந்திரகுமார் அவர்களின் உயிர் பிரிந்த பௌதீக உடல் கண்ணாடிப் பெட்டிக்குள் சலனமற்ற நிலையில் கிடத்தப்பட்டு இருந்தது.அறைமுழுதும் மனிதமுகங்கள் அழுத்தமான மன நிலையோடு தேங்கியிருந்தனர்.

l_univers_2242

            நாங்கள் அவர் உடலைச் சுற்றி நின்றோம்.அந்தக் கனத்த மவுனத்திற்கும் கதறலுக்கும் இடையே அவருக்கு ஆன்ம சாந்தி தவத்தைச் செய்து பிரிந்து நிற்கும் அண்ணாரது கர்மப்பதிவுகள் அல்லது கடமைகள் இருக்குமேயானால் அதை அவர் கருவழியான வாரிசுகள் அல்லது எண்ணத்தால் அவரோடு ஒத்த எவரின் உடலிலாவது தங்கி நிறைவேற்றிக்கொள்ள முயல்வார்.ஆனால் அது சில கால விரயத்திற்குப் பிறகு நடக்கலாம் ! அவரது ஆன்மாவின் பணியையும் கடமையும் நிறவேற்றும் பொருட்டு, மஹரிசி வழங்கிய ஜீவன்முக்தராக்குவதற்காக துரியாதீதத் தவத்தைக்கொண்டு இந்த ஆன்ம சாந்தி தவத்தினைச் செய்து இங்குத் தவமியற்றுபவர்கள் தவத்தின் மூலம் அண்ணாரது ஆன்மாவைப் பங்கீடு செய்து இசைந்து ஏற்றுக்கொண்டு அவரது ஆன்மாவை அமைதிப்படுத்த இருக்கிறோம்.அது மட்டுமல்ல அவரை இழந்துத் தவிக்கு அவரின் குடும்ப உறுபினர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக வாழ்வின் நிலையாமை பற்றிய உண்மைகளை எடுத்துச்சொல்லி அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இதன் மூலம் முயல்கிறோம்

எங்கள் அன்பர்களில் மூத்தவர் ஒருவர் அங்குக் கூடியிருந்த அனைவரிடமும் அண்ணார் திரு,சந்திரகுமார் அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் அண்ணார் இனி வரும் அனைத்து நிகழ்வுகளுக்கும் உறுதுணையாக இருக்க ஆன்ம சாந்தி தவம் நடத்த அனுமதியும் ஒத்துழைப்பும் தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.அமைதியாக நாங்கள் இயற்ற இருக்கும் தவத்தைப்பற்றி சொல்லி தவம்மியற்ற உதவுமாறு எங்கள் சார்பில் வேண்டுதலை வைத்தார்.

தவம் செய்பவர்கள் அண்ணாரின் உடலைச்சுற்றி அமர்ந்துகொண்டோம்.இந்த தவம் இயற்றக் குறைந்தது ஆறு தவயோகிகள் இருப்பது அவசியம் அதற்கு மேல் எத்தனைபேர் வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் இருக்கும்போதோ அல்லது மறைந்த 7 நாளுக்குள் செய்வது நல்லது .
அங்கு இருந்த பலருக்கும் ஆன்ம சாந்தி தவம் என்றால் என்ன என்று புரிந்துக் கொண்டவர்கள் குறைந்த நபர்களாக இருந்தாலும் அவர்கள் அமைதியாக ஒதுங்கி ஒத்துழைப்புத்தந்தனர்.

மூத்த அன்பர் தவத்தை இயற்றத் தொடங்கினார்…
இறை வணக்கம் குரு வணக்கம் பாடப்பட்டது.
(காலம் கருதி அங்கு சில விசயங்கள் சுருக்கமாக நடைபெற்றது.முக்கியமாக அண்ணாரது உருவப்படம் அங்குத் தவமியற்றுபவர்கள் பார்வையில் படுமாறு வைக்கப்பட்டு,பிறப்பிற்கு முன்,வாழும் காலத்தில் ,இறப்பிற்குப் பின் உயிரின் நிலைப்பற்றி 45 நிமிடங்கள் பேசவேண்டியதும் அதோடு அண்ணாரது குணநலன் பற்றியும் அவர் இறப்பு நிகழ்ந்த விதம் பற்றியும் அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் எடுத்துக்கூற அனுமதிக்க வேண்டும் என்பது அதில் ஒரு முக்கிய அம்சம் .ஆனால் அங்கிருக்கும் அவர் உடல் இன்னும் குறிகியக் நேரத்திற்குள் மின்மயானம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டு இருக்கிறது என்பதால் ஒன்றினால் ஒன்று கெடக்கூடாது என்ற குருவின் அறவழி அங்குப் பின்பற்றப்பட்டது .)

images

குருவை வணங்கி அவரின் துணையோடு அரம்பிக்கப்பட்டது.

தவமியற்றுபவர் முதலில் தனக்கு அருட்காப்புச் செய்துகொண்டு எங்களனைவருக்கும் மூன்றுமுறை அருட்காப்பிட்டார்
இடத்தூய்மை,அருளலை பாய்ச்சுதல்,அன்னை தந்தை செய்து கொண்டோம்.
ஆக்கினை மூன்று நிமிடமும்
துரியம் ஐந்து நிமிடமும்
அண்ணாரின் முழு உருவத்தையும் மனதில் இணைத்துக்கொண்டு மெதுவாக உயர்ந்து துவாத சாங்கத்தில் ஒருநிமிடமும்,
அதற்குமேல் உயர்ந்துச் சந்திரனில் அரை நிமிடமும்
மேலும் உயர்ந்துச் சூரியனில் அரை நிமிடமும்
அப்படியே சூரியனை மையமாக வைத்து சுற்றி எல்லாப்புறங்களிலும் மனதால் விரிந்துப் பரவி அண்ணாரது உருவ நினவு அலைகளை இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாக் பஞ்சுபொதியைப் பிரித்துப் பரவ விடுவதுபோலப் பரவ விட்டு
சக்திக் களத்தில் ஐந்து நிமிடமும்
இறந்த அண்ணாரது நினைவலைகளைப் பிரபஞ்சத்தில் விட்டுவிட்டு, நம்மைத் தூய்மை செய்வதற்காகப் பிரபஞ்சதிற்கு அப்பால் மேலும் மனம் விரிந்து சுத்த வெளியில் ஐந்து நிமிடம்,

வாழ்க வளமுடன் என வாழ்த்தித் தவத்தை நிறைவு செய்ய மனதால் சுருங்கிப் பிரபஞ்சத்திற்கு வந்து அரை நிமிடமும்
மேலும் இறங்கிச் சூரியனில் 15 வினாடியும்
அதிலும் சுருங்கிச் சந்திரனில் 15 வினாடியும்
மேலும் இறங்கித் துவாத சாங்கத்தில் 30 வினாடியும்
துரியத்தில் 30 வினாடியும் நின்று ,சந்திர குமார் அவர்கள் ஆன்மா சாந்தி அடைவதாக ,அமைதி பெறுவதாக,கூறித் தவத்தை நிறவு செய்தோம்.
மீண்டும் ஒரு முறை அண்ணார் உடலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு மேலே நடக்கவிருக்கும் இறுதிச் சடங்கை நிறைவேற்ற ஒதுங்கி நின்று ஒத்துழைத்தோம்..

விலகி நின்று ரசிக்கும் போது வாழ்க்கைப் பயணம் நிறைவாகப் போகிறது ...

Posted in Uncategorized
One comment on “ஆன்ம சாந்தி தவம்.
  1. இப்போது இந்தத் தவத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.இறுதியாக சுத்தவெளியில் ஐந்து நிமிடம் தவமியற்றிய பிறகு நேராக ( பேரியக்க மண்டலம் ,சூரியன், சந்திரன், துவாதசாங்கம் தவிர்த்து ) துரியத்தில் வந்திறங்கி தவத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும் (ஆதரம் – SMART ஆசிரியர் வழிகாட்டி 11 ஆம் பதிப்பு ஆகஸ்டு 2015)

Leave a comment